×

ஊருக்குள் பயத்தை உண்டாக்க வேண்டும் என்பதற்காக கூலித்தொழிலாளி கொலை: 6 பேர் கைது!

நிலக்கோட்டை: ஊருக்குள் பயத்தை உண்டாக்க வேண்டும் என்பதற்காக நடுப்பட்டியைச் சேர்ந்த
கூலித்தொழிலாளி கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். நடுப்பட்டியை சேர்ந்த கூலி தொழிலாளி ஆண்டார் என்ற 55 வயது முதியவர் தனது வீட்டு வாசலில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதலில் கூலி தொழிலாளி படுகொலை செய்யப்பட்டதால் அப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இது தொடர்பாக நிலக்கோட்டை காவல் ஆய்வாளர் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்துள்ளார்.

இந்நிலையில், கொலை சம்பவத்தில் ஈடுப்பட்டுள்ள 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். பேச்சுவார்த்தையின்போது யாரும் எதிர்த்து பேசக்கூடாது, தங்கள் மேல் பயம் வர வேண்டும் என்பதற்காக கொலை செய்ததாக போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளனர். ஏற்கனவே வீட்டின் முன் ஜல்லி கற்கள் கொட்டுவது தொடர்பாக இவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.

 

The post ஊருக்குள் பயத்தை உண்டாக்க வேண்டும் என்பதற்காக கூலித்தொழிலாளி கொலை: 6 பேர் கைது! appeared first on Dinakaran.

Tags : Nilakottai ,Nadupatti ,Andar ,Dinakaran ,
× RELATED நிலக்கோட்டை அருகே பயம் வர வேண்டும்...